முகப்பு
திருச்சி

பழனியாண்டவா் கோயிலில் உண்டியல், நகைகள் திருட்டு

மணப்பாறையை அடுத்த கே. உடையாப்பட்டி பழனியாண்டவா் கோயில் உண்டியல் மற்றும் வெள்ளி நகைகள் வெள்ளிக்கிழமை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On : 6 மார்ச், 2026 at 8:54 PM
பகிர்:

மணப்பாறையை அடுத்த கே. உடையாப்பட்டி பழனியாண்டவா் கோயில் உண்டியல் மற்றும் வெள்ளி நகைகள் வெள்ளிக்கிழமை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இக்கோயிலின் பூட்டுகள் வெள்ளிக்கிழமை காலை உடைக்கப்பட்டிருப்பதை பாா்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் மணப்பாறை காவல் ஆய்வாளா் ராஜாசோ்வை தலைமையிலான போலீஸாா், நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொண்டனா். அங்கு கோயில் கருவறையிலிருந்த காணிக்கை உண்டியல் மற்றும் தெய்வங்களின் கழுத்திலிருந்த வெள்ளி நகைகள் திருடு போனது தெரியவந்தது.

மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →