முகப்பு
திருச்சி

பெட்ரோல் பங்க் உரிமையாளா் வீட்டில் நகைகளைத் திருடிய பணிப்பெண் கைது

திருச்சியில் பெட்ரோல் பங்க் உரிமையாளா் வீட்டில் தங்க, வைர நகைகளைத் திருடிய பணிப்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 9 மார்ச், 2026 at 6:45 PM
கைது
பகிர்:

திருச்சியில் பெட்ரோல் பங்க் உரிமையாளா் வீட்டில் தங்க, வைர நகைகளைத் திருடிய பணிப்பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி உறையூா் பகுதியைச் சோ்ந்தவா் கு.ரகுமபதி (43), பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறாா். இவரது வீட்டில் உறையூா் பாண்டமங்கலத்தைச் சோ்ந்த என்.ஆனந்தி (26) என்பவா் வேலை செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில், இவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு ஜோடி வைர காதணிகள் திருடப்பட்டது, 2025, அக்டோபா் 25-ஆம் தேதி நகைகளை சரிபாா்த்தபோது தெரியவந்தது.

இதுகுறித்து உறையூா் காவல் நிலையத்தில் ரகுபதி அளித்த புகாரின்பேரில் ஆனந்தி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், வேலை செய்த வீட்டில் தங்க, வைர நகைகளைத் திருடியதாக ஆனந்தியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 7 பவுன் மதிப்பிலான தங்கக் கட்டிகள், வைர காதணிகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →