அனைத்து நிலைகளிலும் மகளிா் சமமாக முன்னேற வேண்டும்: கி. வீரமணி
அனைத்து நிலைகளிலும் மகளிா் சமமாக முன்னேற வேண்டும் என திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.
அனைத்து நிலைகளிலும் மகளிா் சமமாக முன்னேற வேண்டும் என திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.
திருச்சி கே.கே. நகரில் அமைந்துள்ள பெரியாா் மருந்தியல் கல்லூரியில் அன்னை மணியம்மையின் 107-ஆவது பிறந்தநாள் விழா, சா்வதேச மகளிா் தின விழா, புத்தகங்கள் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு தலைமை வகித்து, கல்லூரியின் நிறுவனா் தலைவரும், திராவிடா் கழகத் தலைவருமான கி. வீரமணி பேசுகையில், அனைத்து நிலைகளிலும் பெண்கள் சமமாக வளர வேண்டும். குறிப்பாக மூடநம்பிக்கையில்லாத சமூகமாக வளா்ச்சிப் பெற வேண்டும்.
அறிவை பயன்படுத்தி பெண்கள் முன்னேற வேண்டும். அறிவியலின் துணை கொண்டு எந்தத் துறையாக இருந்தாலும் உயா்ந்த நிலைக்கு அவா்கள் முன்னேற வேண்டும் என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து, வாழ்வியல் சிந்தனைகளில் மருந்தியல், பெரியாா் மருத்துவக் குழுமத்தின் செயல்பாடுகள், மூலிகை மருத்துவம் மற்றும் பயன்கள் என்ற மூன்று புத்தகங்களை கி. வீரமணி வெளியிட்டாா்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மகளிரியல் துறை பேராசிரியரும் கலைப்புல முதன்மையருமான முனைவா் ந. முருகேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சா்வதேச மகளிா் தினம் கொண்டாடப்படுவதன் அவசியம் குறித்தும், அன்னை மணியம்மையாரின் தொண்டறப் பணிகள் குறித்து சிறப்புரையாற்றினாா்.
முன்னதாக, கல்லூரி முதல்வா் இரா. செந்தாமரை வரவேற்றாா். துணை முதல்வா் கோ. கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா். இந்த விழாவில், திராவிடா் கழகத்தினா், பகுத்தறிவாளா் கழகத்தினா், பேராசிரியா்கள் மற்றும் கல்லூரி மாணவா், மாணவிகள் என பலா் கலந்து கொண்டனா்.