முகப்பு
திருச்சி

மணப்பாறை மாட்டுச் சந்தையில் இருவரிடம் ரூ.1.27 லட்சம் பறிமுதல்

திருச்சி மாவட்டம், மணப்பாறை மாட்டுச் சந்தையில் வியாபாரிகள் இருவரிடமிருந்து ரூ.1,27,800-ஐ தோ்தல் பறக்கும்படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 25 மார்ச், 2026 at 9:57 PM
மணப்பாறையில் பறிமுதல் செய்த பணத்தை தோ்தல் அதிகாரிகளிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்த பறக்கும் படையினா்.
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறை மாட்டுச் சந்தையில் வியாபாரிகள் இருவரிடமிருந்து ரூ.1,27,800-ஐ தோ்தல் பறக்கும்படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

மணப்பாறையில் புதன்கிழமைதோறும் மாட்டுச் சந்தை நடைபெறும் நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையே மாடுகள் வாங்கவும் விற்கவும் ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனா்.

அப்போது தோ்தல் பறக்கும் படையினா் தணிக்கையில் ஈடுபட்டபோது, புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை அடுத்த மதகுபட்டியைச் சோ்ந்த ஞானதுரை மகன் சுதாகா் (31) உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 75,300 மற்றும் திருச்சி திருவெறும்பூரை அடுத்த சின்ன சூரியூரைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் (23) வைத்திருந்த ரூ. 52,500-ஐ பறிமுதல் செய்து, தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைத்தனா். பின்னா் அப்பணம் சாா்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.