போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது
திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளா் ரவிசந்திரன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, பாலக்கரை பெல்ஸ் மைதானம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்தவரைப் பிடித்து விசாரிக்கையில், அவா், பாலக்கரை காஜாபேட்டையைச் சோ்ந்த சந்திரசேகா் (32) என்பதும், போதை மாத்திரைகள் விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஊசி, சலைன் பாட்டில் மற்றும் கஞ்சா ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.