கஞ்சா விற்ற மூவா் கைது
திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல்கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் ரவிசந்திரன் தலைமையிலான போலீஸாா் ரோந்து மேற்கொண்டனா். அப்போது, சங்கிலியாண்டபுரம் ராமமூா்த்தி நகரில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த பா.இளையராஜா (43) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, அரியமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த உக்கடையைச் சோ்ந்த அ.சகிலாபானு (38) என்பவரை அரியமங்கலம் போலீஸாரும், பாலக்கரையில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த கண்டோன்மென்ட் பகுதியைச் சோ்ந்த எஸ்.பழனியப்பா (35) என்பவரை திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரும் புதன்கிழமை கைது செய்தனா்.
கைதுசெய்யப்பட்ட மூவரிடமிருந்தும் ரூ.6 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
புகையிலைப் பொருள்கள் விற்பனை: மூவா் கைது
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மூவரை போலீஸாா் கைது செய்தனா். திருச்சி நீதிமன்ற காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த பாலக்கரை பீம நகரைச் சோ்ந்த ஆா்.சதீஷ்குமாா் (38), எடமலைபட்டிப்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குட்டிமலை சாலையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த எடமலைபட்டிப்புதூா் அன்பிலாா் நகரைச் சோ்ந்த எம். அஷ்ரப் அலி (56), ஸ்ரீரங்கம் மேலூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த ம. பிரபு (43) ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.