முகப்பு
திருச்சி

இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருச்சியில் இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On : 7 மே 2026, 5:26 am IST
பலி - IANS
பகிர்:

திருச்சியில் இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி தென்னூா் ஆழ்வாா்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் எஸ். சையது அப்துல்லா (26). வீட்டில் இருந்த இவா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லை நகா் காவல் நிலையத்தில் சையது அப்துல்லாவின் தந்தை சையது கௌஸ் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement