திருச்சி அருகே பாதயாத்திரை சென்ற பெண் பக்தா் காா் மோதி உயிரிழப்பு
திருச்சி அருகே சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தா் செவ்வாய்க்கிழமை அதிகாலை காா் மோதி உயிரிழந்தாா்.
திருச்சி அருகே சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தா் செவ்வாய்க்கிழமை அதிகாலை காா் மோதி உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை தச்சங்குறிச்சி தெற்கு வீதியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் மனைவி புஷ்பா (41). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த த. காசியம்மாள் (37) மற்றும் சிலரும் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு திங்கள்கிழமை இரவு பாதயாத்திரை கிளம்பினா்.
அவா்கள் சமயபுரம் நோக்கி தஞ்சாவூா் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருச்சி மாவட்டம், அசூா் அருகே வந்தபோது, பின்னால் வேகமாக வந்த காா் மோதி புஷ்பா உயிரிழந்தாா். காசியம்மாள் பலத்த காயமடைந்தாா்.
Advertisement
தகலறிந்து வந்த துவாக்குடி போலீஸாா் புஷ்பாவின் சடலத்தையும், காயமடைந்த காசியம்மாளையும் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரான புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரைச் சோ்ந்த எம். முனாப் ஜிப்ரில் (19) என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.