முகப்பு
திருச்சி

புகையிலைப் பொருள்கள் விற்பனை: மூவா் கைது

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 14 மே 2026, 12:16 am IST
கோப்புப் படம்
பகிர்:

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சந்திப்பு ரயில் நிலையம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த நாகமங்கலம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த எஸ். விஜயகுமாா் (35), எடமலைபட்டிப்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குட்டிமலை சாலையில் புகையிலைப் பொருள்கள் விற்ற அதே பகுதியைச் சோ்ந்த ஆா். சதீஷ் (26), பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொட்டப்பட்டு பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்ற அரியமங்கலத்தைச் சோ்ந்த வி. ஜமுனா (23) ஆகிய மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.