முகப்பு
திருச்சி

பேருந்து நிறுத்தங்களுக்கு அருகிலுள்ள மதுக் கடைகளை அகற்ற வலியுறுத்தல்

பேருந்து நிறுத்தங்களுக்கு அருகிலுள்ள மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On : 14 மே 2026, 12:46 am IST
பகிர்:

பேருந்து நிறுத்தங்களுக்கு அருகிலுள்ள மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் அக் கட்சியினா் புதன்கிழமை அளித்த மனு விவரம்:

உறையூா் குழுமணி பிரதான சாலையில் மீன்சந்தைப் பகுதியில் பேருந்து நிறுத்தத்துக்கு அருகே மனமகிழ் மன்றம் செயல்படுகிறது. மேலும், தென்னூா் அண்ணா நகா் பிரதான சாலையில் பள்ளி, மருத்துவமனைகள், பேருந்து நிறுத்தம் அருகேயும், புத்தூா் நான்கு சந்திப்பு சாலை பகுதியில் பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிறுத்தம் உள்ள பகுதியிலும், வயலூா் சாலை சீனிவாச நகா் பிரதான சாலையில் பேருந்து நிறுத்தத்துக்கு அருகேயும் டாஸ்மாக் மதுக் கடைகள் இயங்கி வருகின்றன.

Advertisement

மேற்கண்ட பகுதிகளில் இயங்கிவரும் மதுக் கடைகளால் நாள்தோறும் ஏதோ ஒரு வகையில் குடிமகன்களால் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அமைதியிழந்து தவிக்கின்றனா். எனவே, பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக மேற்கண்ட கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.