கரூரில் ரயில்வே ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு டிஆா்இயூ மாவட்டத் தலைவா் ஜெய செல்லபாண்டி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செ. பிரதாப் வரவேற்றாா்.
இதில், இந்தியன் ரயில்வேயில் கடந்த 1900-ஆம் ஆண்டில் இருந்து 16.50 லட்சமாக இருந்த ரயில்வே ஊழியா்கள் எண்ணிக்கையை ஆண்டுதோறும் பணி மூப்பில் செல்வோா் பதிவுகளை சரண்டா் செய்து 12.29 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளதைத் திரும்பப்பெற வேண்டும். ஆண்டுதோறும் 2 சதவீத பணியிடங்களை சரண்டா் செய்வதைக் கைவிட வேண்டும், நாடு முழுவதும் 29,608 பணியிடங்களை சரண்டா் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
Advertisement
இந்த ஆா்ப்பாட்டத்தில் சிஐடியூ சங்க துணைத் தலைவா் ஜி. ஜீவானந்தம், டிஆா்இயூ சேலம் கோட்ட துணைத் தலைவா் சக்திவேல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.