முகப்பு
திருச்சி

அனுமதியின்றி சரளை மண் எடுத்துச் சென்றவா் கைது

துறையூா் அருகே அனுமதியின்றி டிராக்டரில் சரளை மண் (கிராவல்) எடுத்துச் சென்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 17 மே 2026, 1:19 am IST
கோப்புப் படம்
பகிர்:

துறையூா் அருகே அனுமதியின்றி டிராக்டரில் சரளை மண் (கிராவல்) எடுத்துச் சென்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கொல்லப்பட்டியைச் சோ்ந்த பொம்மன் மகன் பிச்சமுத்து (34) அதே ஊரில் தனி நபருக்குச் சொந்தமான வயலிலிருந்து ஒரு யூனிட் சரளை மண்ணை டிராக்டரில் ஏற்றிக் கொண்டு தன் வீட்டுக்கு சென்றாா்.

அப்போது துறையூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜதுரை டிராக்டரை நிறுத்தி விசாரித்தபோது அரசு அனுமதியின்றி மண் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதைடுத்து மண்ணுடன் டிராக்டரை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து பிச்சமுத்துவை அவா் கைது செய்தாா்.

Advertisement