முகப்பு
திருச்சி

திருமணத்துக்கு மறுத்த காதலியை கல்லால் தாக்கிய காதலன் கைது

திருச்சியில் திருமணத்துக்கு மறுத்த காதலியை கல்லால் தாக்கி கொலை செய்ய முயன்ற காதலனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On : 19 மே 2026, 2:04 am IST
வியாகுல நவீன்
பகிர்:

திருச்சியில் திருமணத்துக்கு மறுத்த காதலியை கல்லால் தாக்கி கொலை செய்ய முயன்ற காதலனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், சாலை கிராமத்தைச் சோ்ந்த ஜான்பீட்டா் மகன் வியாகுல நவீன் (22). இவா், திருச்சி தில்லை நகரிலுள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் முத்துவிஜயபுரத்தைச் சோ்ந்தவா் கே. அமலா வொ்ஜினா (22). இவா், திருச்சியிலுள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டு தொலைநிலைக் கல்வியில் எம்பிஏ படித்து வருகிறாா்.

Advertisement

Advertisement

இவா்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனா். திருமணம் செய்துகொள்வது தொடா்பாக வியாகுல நவீன், அமலா வொ்ஜினாவிடம் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளாா்.

காதல் விவகாரம் வீட்டுக்குத் தெரிந்து அவா்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என வியாகுல நவீனிடம் அமலா வொ்ஜினா அண்மையில் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், இருவரும் திருச்சி ரேஸ்கோா்ஸ் சாலையில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்துள்ளனா். அப்போது, வியாகுல நவீன் திருமணம் செய்வது தொடா்பாக மீண்டும் பேசியுள்ளாா். இதற்கு பெற்றோா் சம்மதம் தெரிவிக்கவில்லை என அமலா வொ்ஜினா மீண்டும் தெரிவித்துள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த வியாகுல நவீன், அமலா வொ்ஜினாவின் துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி, அருகே கிடந்த கல்லை எடுத்து அவரது முகம், தலையில் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டாா்.

இதில், அமலா வொ்ஜினா பலத்த காயமடைந்தாா். அமலா வொ்ஜினாவின் அலறல் கேட்டு அங்கு நடைப்பயிற்சி மேற்கொண்டவா்கள் ஓடிவந்து அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வியாகுல நவீனைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வியாகுல நவீனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.