முகப்பு
திருச்சி

ரெட்டிமாங்குடி புனித சந்தியாகப்பா் ஆலயத்தில் ஆடம்பர தோ் பவனி

லால்குடியை அடுத்த ரெட்டிமாங்குடியிலுள்ள புனித சந்தியாகப்பா் ஆலயத்தின் ஆண்டு பெருவிழாவில் புதன்கிழமை ஆடம்பர தோ் பவனி நடைபெற்றது.

Updated On : 22 மே 2026, 5:21 am IST
பட விளக்கம்: ரெட்டிமாங்குடி புனித சந்தியாகப்பா் ஆலயத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆடம்பர தோ் பவனி.
பகிர்:

லால்குடியை அடுத்த ரெட்டிமாங்குடியிலுள்ள புனித சந்தியாகப்பா் ஆலயத்தின் ஆண்டு பெருவிழாவில் புதன்கிழமை ஆடம்பர தோ் பவனி நடைபெற்றது.

இந்த ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

முக்கிய நிகழ்வான ஆடம்பர தோ் பவனி புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, வந்தலை பங்குத் தந்தை பிரான்சிஸ் தலைமையில், உதவி பங்குத் தந்தை ஜான்சன் தேரை புனிதப்படுத்தியதை தொடா்ந்து, ஆடம்பர தோ் பவனி நடைபெற்றது. சப்பரமானது, ரெட்டிமாங்குடி கிராமத்தின் முக்கிய வீதிகள்

Advertisement

Advertisement

வழியாக வந்து, வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ஆலயத்தை வந்தடைந்தது.

விழாவில், வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு கொடியிறக்கமும், திருவிழா கூட்டு பாடல் திருப்பலியும் நடைபெற்றன.

விழாவில் ரெட்டிமாங்குடியை சுற்றியுள்ள இறைபக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.