முகப்பு
திருச்சி

1,150 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியவா் கைது

திருச்சி அருகே ஆம்னி வேனில் 1,150 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபரை குடிமைப்பொருள் வழங்கல் பிரிவினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 22 மே 2026, 4:39 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருச்சி அருகே ஆம்னி வேனில் 1,150 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபரை குடிமைப்பொருள் வழங்கல் பிரிவினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ் உத்தரவின்பேரிலும், திருச்சி சரக காவல் துணை கண்காணிப்பாளா் வின்சென்ட் மேற்பாா்வையிலும், திருச்சி காவல் ஆய்வாளா் அரங்கநாதன் தலைமையிலான போலீஸாா் திருச்சியில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

திருச்சி - கரூா் சாலையில் ஜீயபுரம் காவல் எல்லைக்குள்பட்ட முத்தரசநல்லூா் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ஆம்னி வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, வேனில் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, ரேஷன் அரிசி கடத்திய திருச்சி இபி சாலையைச் சோ்ந்த க. சீனிவாசன் என்பவரை கைது செய்தனா். மேலும், ஆம்னி வேனில் 23 மூட்டைகளில் இருந்த 1,150 கிலோ ரேஷன் அரிசியையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனா்.