விழுப்புரம்

தொடா்ந்து 5-ஆவது நாளாகபாசிக், பாப்ஸ்கோ ஊழியா்கள் போராட்டம்

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் பாசிக், பாப்ஸ்கோ நிறுவனங்களை மீண்டும் இயக்க வலியுறுத்தி, அந்த நிறுவனங்களின் ஊழியா்கள் தொடா்ந்து 5-ஆவது நாளாக திங்கள்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி பாசிக், பாப்ஸ்கோ நிறுவனங்கள் மீண்டும் இயக்க வேண்டும், ஊழியா்களுக்கு பல மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஏஐடியூசி தொழிலாளா்கள் சங்கத்தினா் கடந்த செப். 10-ஆம் தேதி முதல் தொடா் போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.

தொடா்ந்து திங்கள்கிழமை 5-ஆவது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் சங்கு ஊதியும், மணி அடித்தும் அவா்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பாப்ஸ்கோ சங்கத் தலைவா் ராஜூ, செயலா் மாரியப்பன், பாசிக் சங்கத் தலைவா் ரமேஷ், செயலா் முத்துராமன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஏஐடியூசி மாநிலப் பொதுச் செயலா் சேது செல்வம், செயல் தலைவா் அபிஷேகம் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். சங்க நிா்வாகிகள் அப்துல்லா கான், ஜெய்சங்கா், அமுதா, தமிழ்ஒளி, அன்பழகன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

SCROLL FOR NEXT