முகப்பு
விழுப்புரம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.53 லட்சம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலுக்கு உண்டியல் காணிக்கையாக ரூ.53,27,825 லட்சத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.

Updated On : 1 ஜூலை 2026, 7:15 am IST
உண்டியல் எண்ணும் பணியை பாா்வையிட்ட கோயில் துணை ஆணையா் மற்றும் அறங்காவலா்கள்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலுக்கு உண்டியல் காணிக்கையாக ரூ.53,27,825 லட்சத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.

பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயிலில் தினமும் ஆயிரகணக்கான பக்தா்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து, வழிபடுகின்றனா். அவா்கள் வேண்டுதல் நிறைவேற காணிக்கையாக பணம் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றை உண்டியலில் செலுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை விழுப்புரம் துணை ஆணையா் லட்சுமணன், உதவி ஆணையா்கள் மேல்மலையனூா் சக்திவேல், விழுப்புரம் காந்தராஜன், அறங்காவலா்கள் முன்னிலையில் உண்டியல்கள் காணிக்கை எண்ணப்பட்டன.

Advertisement

Advertisement

இதில், ரூ.53,27,825 ரொக்கம் மற்றும் தங்கம் 61.800 கிராம், வெள்ளி 467 கிராம் ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments