கடலூர்

"டெங்கு நோயாளிகளுக்கு சித்த மருந்து கசாயம்'

தினமணி

டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு, சித்த மருந்து கசாயத்தை கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரரத்னூ வழங்கினார்.
 ÷டெங்கு காய்ச்சல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிக்கப்பட்டவர்கள் கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயலாற்றி வருகிறது.
 ÷இந்நிலையில், டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் சித்த மருத்துவ குணமுடைய நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு சாறு ஆகிய சித்த மருந்துகளை விலையில்லாமல் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். ÷கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, ஆட்சியர் ராஜேந்திரரத்னூ திங்கள்கிழமை நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு சாறுகளை வழங்கினார்.
 ÷பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது: "டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு, சித்த மருந்துகளான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு சாறுகளை நவம்பர் 1-ம் தேதி முதல் காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் வழங்கி வருகிறோம். ÷இதுவரையில் 1,800 நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்களின் அளவு குறையாமல் பாதுகாக்கின்றன. நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்புகின்றனர்.
 ÷இந்த சித்த மருந்துகளுக்கு எந்தவித பத்தியமும் இல்லை, காய்ச்சல் இல்லாதவர்களும் நோய்த் தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தலாம். கடலூர் மாவட்டத்தில் உள்ள 8 அரசு மருத்துவமனைகள், 35 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சித்த மருத்துவப் பிரிவுகளில் விலையேதுமின்றி கிடைக்கும்' என ஆட்சியர் கூறினார்.
 ÷உடன் இணை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் மா.மனோகரன் உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT