கடலூர்

மழையால் வீடு இழந்தவர்களுக்கு எம்எல்ஏ நிவாரணம்

தினமணி

பண்ருட்டி பகுதியில் மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் நிவாரண உதவிகளை வழங்கினார்.
 பண்ருட்டி ஒன்றியப் பகுதியில் அண்மையில் பெய்த மழையால், நெய்வேலி தொகுதிக்கு உள்பட்ட புலவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், லதா, அமராவதி ஆகியோரது வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
 இதுகுறித்து தகவல் அறிந்த நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், பாதிக்கப்பட்டவர்களை அண்மையில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது, மாவட்ட விவசாயப் பிரிவு அமைப்பாளர் ஞானமணி, எலவத்தடி ராமலிங்கம், புலவன்குப்பம் செல்வக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT