கடலூர்

பேருந்தில் சாராயம் கடத்தல்: இருவர் கைது

DIN

கடலூரில் பேருந்தில் சாராயம் கடத்தியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
 கடலூர் ஆல்பேட்டை மதுவிலக்கு சோதனைச் சாவடியில் திங்கள்கிழமை வழக்கமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், புதுவையில் இருந்து கடலூருக்கு வந்துகொண்டிருந்த பேருந்தில் 120 லிட்டர் சாராயம், 40 மதுப் பாட்டில்களை கடத்திச் சென்றதாக, தஞ்சாவூர் கீழவாசலைச் சேர்ந்த ந.பஞ்சவர்ணம் (52) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். இதேபோல, மற்றொரு பேருந்தில் சோதனையின்போது, சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த கோவிந்தன் மனைவி அமுதா என்பவரிடம் இருந்து 120 லிட்டர் சாராயம், 40 மதுப் பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
 மேலும், கடலூர் முதுநகர், சான்றோர்பாளையம், அன்னவெளி பகுதிகளில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த தலா 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர், அதேப் பகுதிகளைச் சேர்ந்த பா.பக்கிரிசாமி (55), சொ.விமல்ராஜ் (28) ஆகியோரை கைது செய்தனர். அதேபோல புதுப்பேட்டையில் சாராயம் பதுக்கியதாக, மண்ணாங்கட்டி (65) என்பவரைக் கைதுசெய்து அவரிடமிருந்த 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT