சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே மதுபானக் கடை உள்ளது. அந்தக் கடையின் பின்புறம் பை ஒன்று துணியால் சுற்றப்பட்டுக் கிடந்தது. சந்தேகமடைந்து, அதைப் பிரித்து பார்த்தபோது, பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையின் சடலம் கிடந்தது.
இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் நகர போலீஸார் குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.