பண்ருட்டியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூலித் தொழிலாளியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த 5 வயதுச் சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மகன் கூலித் தொழிலாளி தியாகராஜன் (30), தனது நண்பரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதை தட்டிக்கேட்ட குழந்தையின் தாயாரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸார் வழக்குப் பதிந்து தியாகராஜனை கைது செய்தனர்.