கடலூர்

காவலர்களுக்கு யோகா பயிற்சி

DIN

பண்ருட்டி காவல் நிலைய காவலர்கள் வெள்ளிக்கிழமை காலை கூட்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர் (படம்).  காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு, பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தலைமை வகித்தார். ஆய்வாளர் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தார். காவலர்கள் மன அமைதி பெறவும், பணியில் பொறுப்புணர்வு, புத்துணர்ச்சியுடன் செயல்பட இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது. வாரத்துக்கு 2 நாள்கள் இந்தப் பயிற்சி அளிக்கப்படும் என காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT