சாலையில் நாற்று நடும் போராட்டம்
காட்டுமன்னார்கோவில் அருகே சாலை வசதி கோரி கிராம மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே சாலை வசதி கோரி கிராம மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ராஜசூடாமணி கிராமத்துக்கு உள்பட்ட புது காலனி தெருவில், 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தத் தெருவில் முறையான சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
எனவே, புதிய சாலை வசதி செய்துதரக் கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இந்த நிலையில், தொடர் மழையால் சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதையடுத்து அந்தச் சாலையில் கிராம மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.