கடலூர்

விருது பெற்ற மாணவருக்கு பாராட்டு

DIN

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை, அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறையில் முதலாமாண்டு பயிலும் மாணவர் ந.முத்துக்குமார். இவர், 2017-18-ஆம் ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, மாணவர் முத்துக்குமாருக்கு காமராஜர் விருது வழங்கினார். விருது பெற்ற மாணவர் ந.முத்துக்குமாரை, திருவள்ளுவர் கல்லூரி நிர்வாகக் குழுத் தலைவர் ஆர்.சட்டநாதன், பொருளாளர் டி.ராமலிங்கம், ஆலோசகர் ஏ.ஆசைத்தம்பி, முதல்வர் வி.ராம்நாத், துறைத் தலைவர் ஆர்.தினேஷ்பாபு மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT