கடலூர்

விவசாயி வீட்டில் 25 பவுன் நகைகள் திருட்டு

DIN

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே விவசாயி வீட்டில் 25 பவுன் நகைகள்  திருடுபோயின. 
திட்டக்குடி அருகே தொழுதூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம். விவசாயி. இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டின் முன்புறம் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். காலையில் எழுந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பின்பக்க கதவு உடைந்த நிலையில் இருந்தது.  வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த 25 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.7 ஆயிரம் பணம்  திருடுபோனது தெரியவந்தது. 
இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT