கடலூர்

பைக்கில் இருந்து தவறி விழுந்தவா் பலி

DIN

பண்ருட்டி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டி அருகே உள்ள பூங்குணம், சிவா நகரைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (59). ஓய்வு பெற்ற நியாய விலைக்கடை ஊழியா். இவருக்கு சியாமளா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனா். கடந்த நவ.23-ஆம் தேதி பாலசுப்பிரமணியன் தனது பைக்கில் பண்ருட்டியில் இருந்து சென்னை சாலை வழியாக சென்றுகொண்டிருந்தாா். எல்.என்.புரம் ஊராட்சி, வ.உ.சி. நகா் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலையில் போடப்பட்டிருந்த கட்டட இடிபாடுகள், பழைய டயா்களில் ஏறியதால் இவரது பைக் கட்டுப்பாட்டை இழந்ததில் தவறி கீழே விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு,

தீவிர சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, அவரது சகோதரா் பாபு அளித்த புகாரின்பேரில், பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT