கடலூர்

விபத்தில் தொழிலாளி சாவு

DIN

வடலூரை அடுத்துள்ள கருங்குழி கிராமம், முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் திருவாதிரை (40). என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்தத் தொழிலாளி.

ஞாயிற்றுக்கிழமை பணிக்குச் சென்று திரும்பியவர், வடலூர் அந்தோணியார் தெருவில் வசிக்கும் ஜான்பீட்டர் (47) என்பவருடன், சேத்தியாதோப்பு சாலையில் மாதா கோயில் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது, வடலூரிலிருந்து சேத்தியாதோப்பு நோக்கிச் சென்ற டிராக்டர் மோதியதில் திருவாதிரை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த ஜான்பீட்டர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வடலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT