கடலூர்

சிதம்பரம் நகரில் சிசிடிவி கேமரா பொருத்த எம்எல்ஏ நிதியுதவி

DIN

சிதம்பரம் நகரில் 100  இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்துவதற்காக கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்தார். 
இதையடுத்து, பணிகளை உடனடியாக தொடங்குவதற்காக முன் பணமாக ரூ.2 லட்சத்தை வழங்கினார். எம்எல்ஏ அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் இந்தத் தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு நகர காவல் ஆய்வாளர் குமார், உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதிமுக நகரச் செயலாளர் ஆர்.செந்தில்குமார் , சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை துணைத் தலைவர் விநாயகம், ஊராட்சிச் செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT