வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, காவல் துறையினர் இணைந்து தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணியை அண்மையில் நடத்தினர்.
ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரா.செல்வராஜ் தலைமை வகித்து, பேரணியை கொடியசைத்து தொடக்கி வகித்தார். வடலூர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்துப் பேசினார். நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் கெüரி, துணை வட்டாட்சியர் சதீஷ், தேர்தல் துணை வட்டாட்சியர் செல்வமணி, முத்திரைத்தாள் துணை வட்டாட்சியர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை நிர்வாக அலுவலர் லதா ராஜா வெங்கடேசன் தொகுத்து வழங்கினார்.