கடலூர்

வீட்டுக்குள் புகுந்து 20 பவுன் நகைகள் திருட்டு

DIN

வேப்பூர் அருகே வீட்டுக்குள் புகுந்து 20 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (60). இவரது மனைவி ராணி (55), மருமகள் பச்சையம்மாள் (35) ஆகியோருடன் வசித்து வருகிறார். புதன்கிழமை குழந்தைவேல், பச்சைம்மாள் இருவரும் தங்களது விவசாய நிலத்துக்கும், ராணி வேப்பூருக்கும் சென்றனராம்.
 பின்னர், மாலை பச்சையம்மாள் வீடு திரும்பிய போது, வீட்டிலிருந்து மர்ம நபர் வெளியே வந்து, வாசலில் தலைக்கவசம் அணிந்து தயாராக நின்றவரின் இருசக்கர வாகனத்தில் ஏறி சென்றதைப் பார்த்தாராம்.
 இதையடுத்து, வீட்டுக்குள் சென்று பார்த்த போது, 2 பீரோக்களும் திறந்த நிலையில், துணிகள் சிதறிக் கிடந்ததாம். இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸார் நடத்திய விசாரணையில், வீட்டிலிருந்த 20 பவுன் தங்க நகைகள் திருடு போனதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். காவல் துறையினர் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT