கடலூர்

மார்க்சிஸ்ட் கையெழுத்து இயக்கம்

பண்ருட்டி அருகே மொபெட் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

DIN

பண்ருட்டி அருகே மொபெட் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
நெய்வேலி, ஏ-பிளாக் மாற்றுக் குடியிருப்பில் வசிப்பவர் சுப்பிரமணியன் (45). இவரது மனைவி புவனேஸ்வரி (35). இவர்களுக்கு 9 வயதில் பெண் குழந்தையும், 7 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு சுப்பிரமணியன் மொபெட்டில் கடலூரில் இருந்து வந்துகொண்டிருந்தார். சத்திரம் - கொள்ளுக்காரன்குட்டை சாலையில் சிறுதொண்டமாதேவி கிராமம் அருகே சென்றபோது, பாலம் கட்டும் பணிக்காக  அமைக்கப்பட்டிருந்த மாற்றுப் பாதையில் செல்லாமல், நேராகச் சென்றதில் சாலையின் நடுவே தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு பேரலில் மொபெட் மோதியது. இந்த விபத்தில் சுப்பிரமணியன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது  மனைவி புவனேஸ்வரி அளித்த புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT