கடலூர்

இளைஞர் மர்மச் சாவு

DIN

சிதம்பரம் அருகே உடலில் காயங்களுடன் இளைஞர் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
 சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் சீனுவாசன் (25) . எம்.எஸ்சி. பட்டதாரியான இவர், சேத்தியாத்தோப்பில் உள்ள வேளாண் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
 இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஊதியப் பிரச்னையில் சீனுவாசன் அந்தப் பணியிலிருந்து விலகினார். பின்னர் புவனகிரி காவல் நிலையத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவில் இணைந்தார். இந்த நிலையில், இவரது நடவடிக்கை சரியில்லை எனக்கூறி, போலீஸ் நண்பர்கள் குழுவிலிருந்து அண்மையில் நீக்கப்பட்டார். இந்த நிலையில், சீனுவாசன் திங்கள்கிழமை இரவு 9.30 மணியளவில் வீட்டில் இந்தபோது அவருக்கு நண்பர் ஒருவரிடமிருந்து செல்லிடப்பேசி மூலம் அழைப்பு வந்ததாம்.
 இதையடுத்து, வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றவர், மீண்டும் திரும்பவில்லையாம்.
 இந்த நிலையில், இவரது வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் தலை, கழுத்து பகுதிகளில் காயங்களுடன் சீனுவாசனின் சடலம் செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டது.
 இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன், புவனகிரி காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் போலீஸார் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புவனகிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சீனுவாசன் கொலை செய்யப்பட்டாரா என விசாரணை மேற்கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT