கடலூர்

அரசுப் பள்ளி ஆண்டு விழா

DIN

சிதம்பரம் அருகே உள்ள பு.மடுவங்கரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்  நடராஜன் தலைமை வகித்தார்.  தலைமை ஆசிரியை ஈஸ்வரி வரவேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர்  மணிவாசகன் முன்னிலை வகித்தார்.
விழாவில் ஐந்தாம் வகுப்பை நிறைவு  செய்யும் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் முதலிரண்டு வகுப்பு மாணவர்களுக்கு சீருடைகளையும், 3, 4, 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில அகராதியையும் வழங்கினார். தொழிலதிபர்  இளங்கோவன்  அனைத்து மாணவர்களுக்கும் ரூ. 12 ஆயிரம் மதிப்பிலான பரிசுப் பொருள்களை வழங்கினார். விழாவில் ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர் கலைச்செல்வன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்  திருஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT