கடலூர்

கல்லூரி மாணவர்கள் கையெழுத்து இயக்கம்

DIN

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்த நிலையில், கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை  கையெழுத்து இயக்கம் நடத்தினர். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த  வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். 
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, இந்தக் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஒரே நாளில் 800 பேர் கையெழுத்திட்டனர். இந்தக் கையெழுத்துகள் அனைத்தும் மனுவுடன் இணைத்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப உள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT