சாராயம் கடத்தியதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், ராமநத்தத்தை அடுத்த தச்சூர் கிராமத்தில் ராமநத்தம் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையில் போலீஸார் புதன்கிழமை அந்தப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை சோதனையிட்ட போது, லாரி டியூப்பில் மறைத்து சாராயம் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த பனையத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பி.சதீஷை (26) (படம்) கைது செய்த போலீஸார், இருசக்கர வாகனம், 165 லிட்டர் சாராயம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.