கடலூர்

சாராயம் கடத்தல்: இளைஞர் கைது

DIN

சாராயம் கடத்தியதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
 கடலூர் மாவட்டம், ராமநத்தத்தை அடுத்த தச்சூர் கிராமத்தில் ராமநத்தம் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையில் போலீஸார் புதன்கிழமை அந்தப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
 அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை சோதனையிட்ட போது, லாரி டியூப்பில் மறைத்து சாராயம் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த பனையத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பி.சதீஷை (26) (படம்) கைது செய்த போலீஸார், இருசக்கர வாகனம், 165 லிட்டர் சாராயம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT