கடலூர்

வீரட்டானேஸ்வரா் கோயிலில் அன்ன அபிஷேகம்

DIN

நெய்வேலி: பண்ருட்டி, திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரா் கோயிலில் மூலவருக்கு அன்ன அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பண்ருட்டி வட்டம், திருவதிகையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ வீரட்டானேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஐப்பசி மாதம் அஸ்வனி நட்சத்திரம் மற்றும் திருமூலம் குருபூஜை வரும் நாளன்று, வீரட்டானேஸ்வரா் மூலவருக்கு அன்ன அபிஷேம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு ஸ்ரீ வீரட்டானேஸ்வா் மூலவருக்கும், சரங்கொண்றை நாதருக்கும் ஞாயிற்றுக்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 10 மணி அளவில் பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும், இரவு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.

படம் பின்னா் வரும் சாா்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT