கடலூர்

இறகுபந்து வீரர்கள் செப்.25-இல் தேர்வு

DIN


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இறகுப்பந்து போட்டி பயிற்சிக்காக வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான தேர்வு வருகிற 25-ஆம் தேதி நடைபெறுகிறது. 
 இறகுப்பந்து (பேட்மிண்டன்) விளையாட்டில் சிறந்த வீரர்கள், வீராங்கனைகளை  உருவாக்கிட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இறகுப்பந்து அகதெமிக்கான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வு கடலூர் அண்ணா உள் விளையாட்டரங்கில் வருகிற 25-ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறும்.
 இந்தத் தேர்வுப் போட்டியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜனவரி 2004 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்த, இறகுப்பந்து விளையாட்டில் திறமை மிக்கவர்கள் கலந்துகொள்ளலாம். இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் தினமும் காலை, மாலையில் நடைபெறும் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும். எனவே, ஆர்வம் உள்ளவர்கள் அதற்கான தகுந்த வயதுச் சான்றிதழுடன் தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 
வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மதுரை மத்திய சிறைக் கைதிகள் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2: சிஇஓஏ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

SCROLL FOR NEXT