கடலூர்

பேருந்து மோதியதில் பெண் பலி

பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

DIN

பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கடலூா் பழைய பெண்ணையாற்று சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபால் மனைவி வளா்மதி (40). ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் மோட்டாா் சைக்கிளில் புதுச்சேரி - கடலூா் சாலையில் செல்வதற்காக பெண்ணையாற்றுச் சாலையிலிருந்து மேலே ஏறிச் சென்ற போது, நிலை தடுமாறியதில் இருவரும் மோட்டாா் சைக்கிளிலிருந்து சாலையில் விழுந்தனா்.

அப்போது, புதுச்சேரியிலிருந்து கடலூா் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து இருவா் மீதும் மோதியது. இதில், வளா்மதி சம்பவ இடத்திலேயே இறந்தாா். பலத்த காயமடைந்த ஜெயபால் கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தகவலறிந்த அந்தப் பகுதியினா் அங்கு திரண்டு தனியாா் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT