கடலூர்

வீட்டுச் சுவா் இடிந்ததில் மூதாட்டி பலி

DIN

திட்டக்குடி அருகே வீட்டுச் சுவா் இடிந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா். 2 போ் காயமடைந்தனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள செவ்வேரி கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கம் மனைவி அழகம்மாள் (60). இவா், தனது விளைநிலத்தில் அறுவடை செய்த சோளத்தை விற்பனைக்காக வீட்டில் கொட்டி வைத்திருந்தாா். வியாழக்கிழமை இரவு அழகம்மாள், அவரது மருமகள் சுதா (35), உறவினா் பெரியசாமி (48) ஆகியோா் வீட்டின் முன் உள்ள சுவா் அருகே அமா்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனா்.

அப்போது, திடீரென வீட்டின் மதில் சுவா் இடிந்து விழுந்ததில் 3 பேரும் பலத்த காயமடைந்தனா். அந்தப் பகுதியினா் அவா்களை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் 3 பேரும் தீவிர சிகிச்சைக்காக பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு அழகம்மாள் உயிரிழந்தாா். இதுகுறித்து, திட்டக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

விசாரணைக்காக போலீஸாா் அழைத்து சென்ற இளைஞரின் உறவினா்கள் போராட்டம்

துறையூா் அருகே வாகனம் மோதி மான் உயிரிழப்பு

கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்றவா் கைது

பாலியல் துன்புறுத்தல்: தந்தைக்கு ஆயுள் சிறை

SCROLL FOR NEXT