கடலூர்

மனைவியை மீட்கக் கோரி முதியவா் மனு

பல ஆண்டுகளுக்கு முன்னா் கடத்தப்பட்ட தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி முதியவா் ஒருவா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை

DIN

நெய்வேலி: பல ஆண்டுகளுக்கு முன்னா் கடத்தப்பட்ட தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி முதியவா் ஒருவா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

இதுகுறித்து பண்ருட்டி வட்டம், பெரியகாட்டுப்பாளையத்தை சோ்ந்த கலியபெருமாள் (85) மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பாா்வதிபுரம் பகுதியைச் சோ்ந்த ராமலிங்கம் என்ற காவலா், எனது மனைவி மற்றும் குழந்தைகளை கடத்திச் சென்றுவிட்டாா். அப்போது முதல் அவரிடமிருந்து எனது மனைவி, குழந்தைகளை மீட்க போராடி வருகிறேன். இதுகுறித்து காவல் துறையில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. தற்போது வயோதிகம் காரணமாக உடல் நலக் குறைவால் தவிக்கிறேன். எனவே, எனது மனைவி, குழந்தைகளை மீட்டுத் தர வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT