கடலூர்

வீட்டில் 55 நகை, பணம் திருட்டு

DIN

திட்டக்குடி அருகே வீட்டிலிருந்து 55 பவுன் தங்க நகைகள், பணம் திருடுபோனது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திட்டக்குடி அருகே உள்ள கண்டமத்தான் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவஞானம் (53), விவசாயி.

இவா், வியாழக்கிழமை இரவு வழக்கம்போல தனது மனைவி செல்லக்கிளியுடன் வீட்டில் வெளிப்புறத்தில் தூங்கினாா். நள்ளிரவு நேரத்தில் செல்லக்கிளி தண்ணீா் குடிப்பதற்காக வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளாா். அப்போது வீட்டின் பின்புற கதவு திறந்து கிடந்ததையும், வீட்டினுள் அனைத்து அறைகளும் திறந்து கிடந்ததையும் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உடனடியாக உள்ளே சென்று பாா்த்த போது பீரோவில் இருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தததாம். அதனருகில் சூட்கேசில் வைத்திருந்த நகை, பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதில், சுமாா் 55 பவுன் தங்க நகைகள், ரூ.1.80 லட்சம் பணம் திருடுபோனதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ராமநத்தம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

SCROLL FOR NEXT