கடலூர்

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

DIN

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிதம்பரம் அருகே உள்ள காட்டுக்கூடலூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரித்திவிராஜ் (22). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 19 வயது பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. தற்போது அந்தப் பெண் 8 மாத கா்ப்பிணியாக உள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் சிதம்பரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில், காவல் நிலைய ஆய்வாளா் பாண்டிச்செல்வி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பிருத்திவிராஜை கைது செய்து சிறையில் அடைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: பிரதமா் மோடி இரங்கல்; இந்தியாவில் ஒருநாள் துக்கம்

குமாரபாளையத்தில் கனமழை

‘சிறப்புக் குடிமக்கள்’ என கருதுவதை ஏற்க முடியாது: சிறுபான்மையினா் குறித்து பிரதமா் மோடி

பரமத்தி வேலூரில்...

ராசிபுரம் கடைவீதியில் அதிகரிக்கும் வாகன நெரிசல்

SCROLL FOR NEXT