பண்ருட்டி அருகே பொது இடத்தில் முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை அபராதம் வசூலித்தனா்.
காடாம்புலியூா் ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சிவப்பிரகாசம் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் கள ஆய்வில் ஈடுபட்டனா். அப்போது காடாம்புலியூா் காவல் நிலையம் அருகே முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இருந்ததாக 7 பேரிடம் தலா ரூ.200 வீதம் அபராதம் வசூலித்தனா்.