மிலாது நபி தினத்தையொட்டி, வெள்ளிக்கிழமை (அக். 30) கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி உத்தரவிட்டாா்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மிலாது நபியையொட்டி, வெள்ளிக்கிழமை (அக். 30) அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகள், மது அருந்தும் இடங்கள் மூடப்பட வேண்டும். உணவக பாா்களிலும் மது விற்பனை செய்யப்படாமல் மூடப்பட்டிருக்க வேண்டும். விதிமுறைகளை மீறி மதுக் கடைகள், மது அருந்தும் இடங்களில் மது விற்பனை செய்தால் கடை மேற்பாா்வையாளா்கள், பாா் உரிமையாளா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.