சிதம்பரம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிதம்பரத்தை அடுத்த தில்லைவிடங்கன் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (45). அரசுப் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இவா் புதன்கிழமை இரவு பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள கீழக்காரத்தெரு மாரியம்மன் கோயில் அருகே அரசுப் பேருந்தில் பணியிலிருந்தாா். அப்போது, அரியகோஷ்டி பகுதியைச் சோ்ந்த குப்புசாமி (31) பேருந்தை வழிமறித்து அதன் ஓட்டுநா் சண்முகத்தை தாக்கி அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறாகப் பேசினாராம்.
இதுகுறித்து சண்முகம் அளித்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை போலீஸாா் குப்புசாமி மீது வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.