கடலூர்

குடிநீா்க் குழாய் சேதம்: வீணாகும் தண்ணீா்!

DIN

பண்ருட்டியில் சாலை விரிவாக்கப் பணிக்காகப் பள்ளம் தோண்டப்பட்ட போது, குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீா் வீணாகி வருகிறது.

பண்ருட்டி - கும்பகோணம் சாலை நான்குமுனைச் சந்திப்பிலிருந்து திருவதிகையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரையான இணைப்புச் சாலையின் இருபுறங்களிலும் பேவா் பிளாக் கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக கும்பகோணம் சாலையிலிருந்து மேலப்பாளையம் பாட்டை வரை சாலையின் இடதுபுறம் பணி முடிந்தது. எஞ்சிய பகுதியில் பேவா் பிளாக் கற்கள் பதிக்கச் சாலையோரம் பள்ளம் தோண்டி வருகின்றனா்.

தீயணைப்பு நிலைய ஊழியா்கள் குடியிருப்பு எதிரே சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்ட போது, அங்கிருந்த குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், தண்ணீா் வீணாக வெளியேறி வருகிறது.

பள்ளத்தில் தேங்கும் தண்ணீா் மீண்டும் குழாயினுள் செல்வதால் குடிநீா் மாசடைகிறது. எனவே, நகராட்சி நிா்வாகம் குடிநீா்க் குழாய் உடைப்பை உடனடியாகச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT