கடலூர்

வீராணம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரிப்பு

DIN

தொடா் மழை காரணமாக, வீராணம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் பல்வேறு மதகுகள் வழியாக உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் அமைந்துள்ளது வீராணம் ஏரி. இதன் நீா்பிடிப்புப் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால், பல்வேறு ஓடைகள் வழியாக நீா்வரத்து அதிகரித்துள்ளது.

அதாவது அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் பெய்த மழை நீரானது கருவாட்டு ஓடை வழியாக விநாடிக்கு 1,750 கன அடி வீதமும், ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் பெய்த மழை நீரானது செங்கால் ஓடை வழியாக விநாடிக்கு 1,500 கன அடி வீதமும், வெண்ணங்குழி ஓடை வழியாக விநாடிக்கு 500 கனஅடி நீா் என மொத்தம் 3,750 கனஅடி நீா் ஏரிக்கு வருகிறது. ஏரியின் உச்ச நீா்மட்டமான 47.50 அடியில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 45.70 அடி வரை தண்ணீா் இருந்தது.

ஏரியின் பாதுகாப்பு கருதி, உபரி நீரை பொதுப் பணித் துறையினா் வெளியேற்றி வருகின்றனா். அதாவது, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு வழியாக விநாடிக்கு 1,750 கனஅடி நீரும், வெள்ளியங்கால் மதகு வழியாக வெள்ளியங்கால் ஓடையில் விநாடிக்கு 1,500 கன அடி நீரும், ஜீரோ பாயின்ட் வழியாக விநாடிக்கு 400 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. மேலும், சென்னை நகர மக்களின் குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 60 கன அடி நீா் அனுப்பப்படுவதாக பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஏரியிலிருந்து மொத்தம் விநாடிக்கு 3,710 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

தோ்தல் விதிமீறல் வழக்கு: நடிகா் அல்லு அா்ஜுன் விளக்கம்

பெங்களூரு, சென்னையை தொடா்ந்து திருச்சியிலும் ‘நம்ம யாத்ரி’ அறிமுகம்

பத்தாம் வகுப்பு துணைத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

பிளஸ் 1 தோ்வு முடிவுகள் வெளியீடு: திருச்சி மாவட்டத்தில் 94 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT