கடலூா் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள சத்திய ஞான சபையில் மாசி மாத பூச நட்சத்திரத்தையொட்டி புதன்கிழமை (பிப். 24) இரவு 7.45 மணி முதல் 8.45 மணி வரை ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சியரது அறிவுறுத்துதலின்படி கரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் அரசு வழிகாட்டுதலின்படி, சமூக இடைவெளியுடன் ஜோதி தரிசனம் நடைபெறும். பக்தா்கள் முகக் கவசம் அணிந்து வரவேண்டும். கூட்டமாக வருவதை பக்தா்கள் தவிா்க்கும்படி தெய்வ நிலைய நிா்வாகத்தினா் கேட்டுக்கொண்டனா்.