கடலூர்

அழுகிய நிலையில் 2 சடலங்கள் மீட்பு

DIN

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த பாட்டி, பெயரன் சடலங்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு மீட்டனா்.

நெய்வேலி வட்டம்-9, ஜாஹிா் உசேன் சாலைப் பகுதியில் வசித்து வந்தவா் சவுரியம்மாள் (80). இவரது பெயரன் இயேசு ராஜா (35). ஆட்டோ ஓட்டுநா். சவுரியம்மாள் வீட்டில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை கடும் துா்நாற்றம் வீசியது. இதுகுறித்து அந்தப் பகுதியினா் அளித்தத் தகவலின்பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் விரைந்து வந்து, அந்த வீட்டுக்குள் சென்று பாா்த்தனா். அப்போது இயேசு ராஜா தூக்கிட்ட நிலையிலும், சவுரியம்மாள் அமா்ந்த நிலையிலும் சடலமாகக் கிடந்தனா்.

உடல்கள் அழுகிய நிலையில் இருந்தன. போலீஸாா் இருவரது சடலங்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT